districts

img

திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர்  சங்க நகர மாநாடு  

திருத்துறைப்பூண்டி, அக்.20- விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருத்துறைப் பூண்டி நகர மாநாடு தியாகி சிவராமன் நினைவேகத்தில் வியாழனன்று நடைபெற்றது.  நகரச் செயலாளர் எஸ்.தண்டபாணி தலைமை வகித்தார். மாநாட்டை, மாவட்டச் செயலாளர் ஆர்.குமார ராஜா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சாமிநாதன், துணை  செயலாளரும் நகர மன்ற துணை தலைவருமான எம்.ஜெய பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன்,  நகரச் செயலாளர் கே.கோபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இம்மாநாட்டில், நகரத் தலைவராக கார்த்தி, நகரச் செயலாளராக ஆர்.எம்.சுப்பிரமணியன், பொருளாளராக பாப்பையன், துணைத் தலைவராக ராமசாமி, துணை செயலாளராக சாமிதுரை உள்ளிட்டோரை கொண்ட 9 பேர் அடங்கிய நகரக் குழு தேர்வு செய்யப்பட்டது.

;