districts

img

30 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு மீண்டும் ரயில் சேவை

மயிலாடுதுறை, அக். 25 - மயிலாடுதுறை ரயில் நிலையத் தில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்று வந்த திருநெல்வேலி பயணிகள்  ரயில், கொரோனா தொற்று காரணமாக  நிறுத்தப்பட்டது. இந்த ரயில் 3 மாதங் களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்ட போது, திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இந்த ரயிலை திரு நெல்வேலி வரை இயக்க வேண்டும் என  ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.  இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு அனைத் தும் முன்பதிவில்லாத பெட்டிகளாக விரைவு ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து திங்க ளன்று காலை 11.30 மணிக்கு புறப்பட்ட  இந்த ரயில், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், ராஜபாளை யம், சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். இதே மார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு  மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.  தற்போது, திருநெல்வேலி செல் லும் பயணிகள் இந்த செங்கோட்டை ரயிலில் திண்டுக்கல் வரை சென்று, ஈரோட்டில் இருந்து வரும் ரயிலில் திருநெல்வேலி செல்லலாம். இதனால்  ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். அதேவேளை, 30 ஆண்டுகளுக்குப் பின்னர் திங்களன்று முதல் 9  பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலை, பயணிகளின் நலனைக் கருதி 23  பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என  ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  மயிலாடுதுறையில் இருந்து திங்கள் கிழமை காலை 11.30 மணிக்கு புறப்பட்ட  செங்கோட்டை விரைவு ரயிலை, மயி லாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்  தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமை யில், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவ னர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், அறம் செய் அறக்கட்டளையினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலா ளர் வேலு.குபேந்திரன், ரயில் பயணிகள்  சங்கம் சுந்தர் மற்றும் ரயில்வே பாது காப்புப் படை காவல் ஆய்வாளர் சுதீர்குமார் மற்றும் பொதுமக்கள் பலர்  உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.