districts

மாணவர்களிடையே ஏற்படும் வன்முறையை தடுக்க ஆலோசனை

தஞ்சாவூர், ஆக.28-  மாணவர்களிடையே வன்முறை உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளை தடுக்க தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம், தஞ்சாவூர் மனநல மருத்துவ சங்கம் சார்பில் உளவியல் ரீதியாக மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த கருத்த ரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பன்னீர்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்களிடம் குற்றச் செயல்களில் ஈடுபடுதல், போதைப் பொருள்களை உபயோகப்படுத்துதல், தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலை முயற்சி போன்ற மனநல பிரச்சனைகள் காணப்படுகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவலின்படி, இந்தி யாவில் 6 முதல் 7 சதவீத சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.  இதில், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, 4-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 16.4 சதவீத  இளம் பருவத்தினர் குற்றச் செயல்களில்  ஈடுபடுகின்றனர். இளம் பருவத்தின ரிடம் போதைப்பொருள் பழக்கம் ஏறத் தாழ 15 சதவீதம் உள்ளது. 15 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 சதவீதம் பேர்  ஒரு முறையாவது போதைப் பொரு ளைப் பயன்படுத்தியுள்ளனர்.  இதில், புகையிலை பயன்பாடு 83.2  சதவீதமாகவும், மது 67.7 சதவீதமாக வும், கஞ்சா 35.4 சதவீதமாகவும், உள்ளி ழுக்கும் மருந்துகள் 34.7 சதவீதமாக வும் உள்ளன. மாணவர்களின் உயிரி ழப்புக்கு, தற்கொலை இரண்டாவது காரணமாக உள்ளது. முதல் காரணம் சாலை விபத்து. ஒரு லட்சம் மாணவர் களில் 6 முதல் 8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகமாக தற்கொலை  முயற்சியில் ஈடுபடுகின்றனர்.  இதற்கு மன அழுத்தம், போதைப் பொருள் பயன்பாடு, பெற்றோர்கள், ஆசிரியர்களைத் திருப்திப்படுத்த முடியாதது போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. குழந்தைகளின் வன்முறைக்கு வறுமை, போதைப்பொருள் பயன்பாடு, வீட்டில் வன்முறை, சரியான வழி காட்டல் இல்லாமை, மேற்பார்வை இல்லாமை, சக மாணவர்கள் கொடுக்கும்  அழுத்தம், படிப்புத் திறன் குறைபாடு, ஊடகத்தின் பங்கு போன்றவையே காரணம். இதைத் தடுக்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு டன் இணைந்து தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கமும் பள்ளி, கல்லூரி களில் மனநல ஆலோசனை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள் ளது” என்றார்.