districts

விளம்பரப் பதாகைகள் கும்பகோணம் கோட்டாட்சியர் எச்சரிக்கை

கும்பகோணம், ஏப்.2 கும்பகோணத்தில் அரசின் விதிமுறை களை மீறி விளம்பர பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பூர்ணிமா எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகள், பெயர்ப் பலகை, வாழ்த்து பேனர்கள் உள்ளிட்டவை வைக்கும் போது  அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொது மக்கள் அரசின் விதிமுறைகளைக் கண்டிப்  பாகப் பின்பற்ற வேண்டும். பொதுமக்க ளுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறாக விளம்பரத் தட்டிகள், பிளக்ஸ்பேனர்  கள் வைக் கக்கூடாது. அரசு வெளி யிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிப் விளம்பர பேனர்கள் அமைக்கப்பட வேண்டும். விதிமுறை களை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்  களை உடனடியாக அப்புறப்படுத்துவது டன்  விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.