தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், பிப். 22 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திங்களூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு தொடர்பாக பட்டியல் எழுத்தர் உள்பட இருவர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் உத்தரவின்படி, சென்னை தலைமை அலுவலக விழிப்புப் பணி அலுவலரும், கூடுதல் பதிவாளரு மான நா. வில்வசேகரன் தலைமையில் விழிப்புக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை புதன்கிழமையன்று ஆய்வு செய்தனர். அப்போது, திருவையாறு அருகே திங்களூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதில், கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர். இதைக் கண்காணிக்கத் தவறிய கொள்முதல் அலுவலர் கொள்முதல் பணி யிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், கொள்முதல் நிலையங்களில் முறைகேடு கண்டறியும்பட்சத்தில் கொள் முதல் நிலைய பணியாளர்கள் மற்றும் கொள்முதல் அலுவலர்கள் மீது கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதேபோல, கடந்த வாரம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதிக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு கார ணமாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி ராமர் பாண்டி கொலை: முதுகுளத்தூரில் 5 நபர் சரண்
இராமநாதபுரம், பிப்.21 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ராமர் பாண்டி கொலை வழக்கு தொடர்பாக முது குளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 5 நபர் சரணடைந்தனர். மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்த வர் ராமர் பாண்டி என்ற ராமகிருஷ்ணன் (38), கடந்த 2012-ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கரூர் நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய ராமர் பாண்டி தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு மேலாக அவரது உடல் உறவினர் வாங்க மறுத்ததை தொடர்ந்து குற்றவாளிகளை காவல்துறையில் வலை வீசி தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருள் சங்கர் முன்னிலையில் மதுரை யைச் சேர்ந்த வினோத் கண்ணன் (26), மகேஷ் குமார் (24), தனுஷ் (21), தர்மா (25), ரமேஷ் ஆகிய 5 பேர் சரணடைந்தனர்.
சிறுபான்மை பள்ளி, மாதா சிலைகள் மீது தாக்குதல்
திண்டுக்கல், பிப்.21- திண்டுக்கல் அருகேயுள்ள பொன்மாந்துறை அதிதி நகர் தேவாலயம், பள்ளி வளாகத்தில் சேதப் படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில், “பொன்னுமாந்துறை அருகேயுள்ள அதிதி நகரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் அருட் சகோதரிகளுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியும், அருகில் உள்ள தேவாலயத்தில் உள்ள வேளாங்கன்னி மாதா சிலையின் கண்ணாடியை உடைத்தும், பள்ளி வளா கத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டிச் சாய்த்தும், மாணவர்கள் குடிநீர் குழாய், வடிகால் குழாயை உடைத்தும் சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இளம் பெண் வழக்கறிஞர் நீதிபதி தேர்வில் தேர்ச்சி கிராம மக்கள் பாராட்டு
சின்னாளப்பட்டி, பிப்.21- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலசுப்பிர மணி-சிவபாக்கியம். அவர்களுடைய மகள் திவ்யா (24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், சட்டப் படிப்பை முடித்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 சிவில் நீதிபதி தேர்வு எழுதிய திவ்யா, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். நேர்முக தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக திவ்யா பதவியேற்க உள்ளார். வழக்கறிஞர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றதை அவரது குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இவரது இளைய சகோதரர் ராகுல் கோயம்புத்தூ ரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரதுதந்தை பாலசுப்பிரமணியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். முதல் முறையாக சித்தரேவு கிராமத்தில் இருந்து இளம் வயதில் பெண் சிவில் நீதிபதியாக பதவியேற்க உள்ள திவ்யாவிற்கு கிராம பொதுமக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
வடமாநில தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி
சின்னாளப்பட்டி, பிப்.22- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த அம்பாதுரை ரயில் நிலையத்திற்கு அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே இருப்பு பாதை காவல்துறையின ருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இருப்பு பாதை காவல்துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசா ரணையில், உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலம் தடால் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டா ராம் என்பவரின் மகன் பெயர் ஹேக்மா ராம் (30) என்பது தெரியவந்தது. இவர் மீதும் இவரது நண்பர் கௌதம் குமார் மீதும் திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் முடவகுறிச்சி காவல் நிலையத்தில் குட்கா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி சின்னாளப்பட்டி அருகே உள்ள ராஜஸ்தான் ஹோட்டலில் தங்கி, திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்திட்டு வந்துள்ளனர். இந்நிலையில், புதனன்று இருவரும் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஹோட்டலுக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு பைபர் படகில் செல்ல 12 வாரங்களில் ஆட்சியர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்
மதுரை, பிப்.22- இராமநாதபுரத்தை சேர்ந்த பிரின்சோ ரைமண்ட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கச்சத்தீவு திருவிழாவிற்கு எந்த வகை படகுகள் அனுமதிக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைப்படி, இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகு களில் மீனவர்கள், பொதுமக்கள் அனு மதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி கள், கச்சத்தீவு திருவிழாவிற்கான நடைமுறைகள் இந்தாண்டு நிறை வடைந்து விட்டது. இருப்பினும் அடுத்த ஆண்டிற்குள் மீனவர்கள் மற்றும் மீனவக் குடும்பங்களை கச்சத்தீவு திருவிழாவிற்கு பைபர் படகில் செல்ல 12 வாரங்களில் ஆட்சியர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் ஜப்தி செய்வது ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, பிப்.22:- இழப்பீடு வழங்குவதற்கு அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடந்த 1994-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்கு பழனிவேல் என்ப வரிடம் இருந்து 4 ஏக்கர் 98 சென்ட் நிலம் பெறப்பட்டது. இதில் ஒரு சென்ட் ரூ.118 அரசு விலையாக நிர்ணயம் செய்யப் பட்டு இழப்பீடாக ரூ.86 ஆயிரத்து 72 வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதாது என்றும் கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பாதிக்கப் பட்ட நபர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் ஒரு சென்ட் ரூ.700 அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு சென்ட் ரூ.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அரசு சார்பில் ரூ.25 லட்சம் பாதிக்கப்பட்ட நபருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மீதமுள்ள இழப்பீட்டு தொகையான ரூ.19 லட்சம் வழங்கப்படவில்லை. இழப்பீடு வழங்காத காரணத்தால் மீண்டும் பாதிக் கப்பட்ட நபர் புதுக்கோட்டை சார்பு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட நிர்வா கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து ரூ.19 லட்சம் மட்டு மல்லாமல் அதற்கு உண்டான வட்டி தொகை யும் சேர்த்து மொத்தம் ரூ.31 லட்சம் வழங்க வேண்டும் என நிதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எந்த தொகையும் வழங்கா மலும் நிதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அசையும் சொத்துக்களான டேபிள், மேஜை, கம்ப் யூட்டர் போன்ற பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட நபர் கோர்ட் அமினா, நீதி மன்ற ஊழியர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அதை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். முருகேசன் நீதிமன்ற ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மாத காலத்திற்குள் நீதிமன்ற உத்தர வுப்படி தொகை வழங்கப்படும் என்று உறுதி யளித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.