பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வ.களத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நலமாணவர் விடுதி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளை பெரம்பலூர் ஆட்சியர் க.கற்பகம் ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீரில் கழுவும் போது மிதக்கும் அரிசிகளை தூக்கிப் போடாதீர்கள், அதுதான் சத்துக்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியென சமையலர்கள், காப்பாளர்களிடம் தெரிவித்தார்.