மன்னார்குடி, மே 15 - தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கூடுதல் இயக்குனர் திலகவதி, மன்னார்குடி உழவர் சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகர-ஒன்றிய குழு நிர்வாகிகள் அவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்த னர். இதுகுறித்து சங்கத்தின் வி.ச. நகரச் செய லாளர் ஜி.மாரிமுத்து தெரிவித்ததாவது: கடந்த 29.4.2022 அன்று விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி மற்றும் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோ ரிக்கை மனு ஒன்றினை அளித்திருந்தனர். அம்மனுவில், தமிழ்நாட்டின் 179 உழவர் சந்தைகளில் சிறந்த முதல் ஐந்து உழவர் சந்தைகளில் ஒன்றான மன்னார்குடி உழவர் சந்தையின் தரத் தகுதி நிலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும். கழிவறை, பெண்கள் ஓய்வறை, ஆவின் பாலகம் உள்ளிட்ட வசதி கள் உருவாக்க வேண்டும். இந்த சந்தை பேருந்து நிலையம் அருகிலேயே தொடர்ந்து செயல்பட ஆவன செய்ய வேண்டும் என கோரி யிருந்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட துறை யின் கருத்துக்கோரி நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னையி லிருந்து கூடுதல் இயக்குநர் திலகவதி, மன்னார்குடிக்கு வந்திருந்து உழவர் சந்தையை ஆய்வு செய்தார். அவருடன் துறையின் திரு வாரூர் மாவட்ட வேளாண் துணை இயக்கு நர் எம்.லெட்சுமிகாந்தன், வேளாண்மை விற்ப னைத் துறையின் செயலாளர் எம்.சரசு ஆகி யோரும் வந்திருந்தனர். அப்போது விவசாயி கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் ஒரு கோரிக்கை மனு நேரில் அளிக்கப்பட்டது. மனு வினை பெற்றுக் கொண்ட கூடுதல் இயக்கு னர் திலகவதி, தகுந்த நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இவ்வாறு ஜி.மாரிமுத்து கூறினார். இச்சந்திப்பின்போது வேளாண் வணிகத் துறை உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா, விவசாயிகள் சங்க நிர்வா கிகள் ஜி.ரெகுபதி, ஜி.முத்துகிருஷ்ணன், நகரக் குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், வீ. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.