districts

img

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட புராதன கட்டிடத்தை அரசுடமையாக்க நடவடிக்கை

தஞ்சாவூர், டிச. 8 - தஞ்சாவூர் அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலின் பின்புறம் தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்ட புராதன கட்டிடத்தை அரசுடமை யாக்கும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்  தொடங்கியுள்ளார். தஞ்சாவூரிலிருந்து புன்னைநல் லூர் மாரியம்மன் கோயில் செல்லும் வழியில், 800 ஏக்கர் பரப்பளவில் சமுத்திரம் ஏரி உள்ளது. கடல் போல  காட்சியளிக்கும் இந்த சமுத்திரம் ஏரியை கடந்த 40 ஆண்டுகளாக அரசும் தனியாரும் ஆக்கிரமித்து வரு வதால், தற்போது குளம்போல சுருங்கி வருகிறது. இந்நிலையில், ஏரிக்கரையில் மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள பாழடைந்த பழைமையான கட்டிட மும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரு கிறது. நீராழி மண்டபம் என அழைக் கப்படும் இந்த மண்டபத்தை “ராணி மண்டபம்” என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் 200 ஆண்டுகளுக்கு முந்தையாக இருக்க லாம் என்றும், மராட்டியர் காலத்தில்  கட்டப்பட்டிருக்கலாம் எனவும் வர லாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏறக்குறைய 10,000 சதுர அடி பரப்பளவில் வடக்கத்திய பாணியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் தரை தளமும், அதன் கீழே சுரங்க தளமும் காணப்படுகின்றன. சுரங்கத் தளம் செல்ல, படிக்கட்டுகள் இருந்தா லும், தற்போது சிதிலமடைந்துள்ளன. சுரங்கத் தளத்தில் பொருள் வைப்பறை உள்ளது. போர் உள்ளிட்ட  அவசர காலத்தில் மன்னர் குடும்பத்தி னர் தங்களது விலை மதிக்க முடியாத  பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க இதுபோன்ற சுரங்கத் தளம்  அமைக்கப்படுவது வழக்கம். மேலும்,  சுரங்கத் தளத்தில் சமையல் கூடமும்  அமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் அறைகள் பல இருப்பதா கத் தெரிகிறது. கட்டிடத்தின் வெளிப் பகுதியில் இருபுறமும் நீண்ட திண்ணை காணப்படுகின்றன. புராதன  சிறப்புடைய இந்த மண்டபத்தில் புதர்களும், குப்பைகளுமாக காணப்படுகிறது.

காலப்போக்கில் இந்த மண்டபம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டதால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு கள் கட்டப்பட்டு, மண்டபமும் ஆக்கிர மிக்கப்படும் நிலையில் உள்ளது.  இதன் முன் பகுதியில் தற்போது தகரங்களால் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மண்டபத்துக்குச் செல்லும் பாதை தடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரலாற்று ஆர்வ லர்கள் மத்தியில் மிகுந்த வேத னையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆடிட்டர் ஆர்.ரவிச்சந்திரன் மாவட்ட  ஆட்சியரிடம் இந்த புராதன மண்ட பத்தை மீட்க வேண்டும் என இரு மாதங்களுக்கு முன் கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கள ஆய்வு  செய்தனர். இந்நிலையில், புதன் கிழமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீராவி மண்டபம்  உள்ள பகுதியை ஆய்வு செய்து, அரசு டமையாக்குவதற்கான நடவடிக் கையை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.