மயிலாடுதுறை, டிச.9 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசியதாவது: மேலையூர்-ஆறுபாதி இடையே காவிரி கரையோரம் உள்ள சாலையை சீரமைக்க வேண் டும். மருதூர் பள்ளிக்கூடத்தில் இருந்து மேலப்பாதி பாலம் செல்லும் வழியில் காவிரி கரை யோரம் கோழி கழிவுகள் உள் ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவ தால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். எனவே அங்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்படு வதை உடனடியாக தடுக்க வேண்டும். மங்கனூர் தெற்கு தெரு சாலை மற்றும் அங்கன்வாடி மைய கட்டி டம் அமைத்து தர வேண்டும். மங்கனூர் மாதா கோயில் செல்லும் சாலையில் வாய்க்கால் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னப்பன்பேட்டை அம்மனாற்றங்கரையில் மயான கொட்டகை அமைக்க வேண்டும். உடையவர்கோயில்பத்து கிரா மத்தில் பயன்படாமல் உள்ள சேத மடைந்த அங்கன்வாடியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். உத்திரங்குடி ஊராட்சி சங்கரன் பந்தலில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். சங்கரன்பந்தல் தமிழன் தெருவில் சாலையை முழுமையாக அமைத்து தர வேண்டும். சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக மருத்துவர்களை நிய மிக்க வேண்டும்.
கிடாரங்கொண்டான் ஊராட்சி யில் உள்ள தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக கிடங்கிற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடியில் சேதமடைந்த சுடுகாட்டு சாலையை சீரமைத்து தர வேண்டும். துடரிபேட்டை கிரா மத்தில் சேதமடைந்த சமுதாயக் கூடத்தை இடித்துவிட்டு புதிதாக அமைக்க வேண்டும். இளையாளூர் ஊராட்சியில் கொசு மற்றும் நாய்கள் தொல் லையை ஒழிக்க வேண்டும். மேலும், ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். திருக்களாச்சேரி ஊராட்சி புது மனைத் தெரு சாலை, சின்னூர் பேட்டை சாலையை புதிதாக அமைக்க வேண்டும். சந்திரபாடி யில் பழுதடைந்துள்ள ஆரம்ப சுகா தார நிலைய கட்டடத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர் பேசுகையில், “தற் போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒன்றியத் திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி களிலும் குடிநீர் தொட்டிகள் உட னுக்குடன் பராமரிக்கப்பட்டு சுகா தாரமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கிராமப் புறங்களில் சட்டத் திற்கு புறம்பாக குழந்தை திரு மணம் நடைபெறுவது தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி களை தொடர்பு கொண்டு தெரி விக்க வேண்டும். இதற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.