districts

img

அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 71 லட்சமாக உயர்வு

தஞ்சாவூர், டிச.17 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தஞ்சாவூர், திருச்சி,  புதுக்கோட்டை, நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, அரிய லூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் பங்கேற்ற  மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை நடை பெற்றது.  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசியதா வது:

இந்த ஆய்வுக் கூட்டத்தில், பள்ளிக்கல்வி  துறையில் செயல்படுத்தி வரும் நலத்  திட்டங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி தரம் குறித்தும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது  குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயலி மூலம் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உள்ளிட்ட  இணை இயக்குநர்கள் கடந்த இரண்டு நாட்க ளாக ஆய்வு மேற்கொண்டு அதனடிப்ப டையில் பள்ளிகளை ஆய்வு செய்து விவரங் கள் அளித்துள்ளனர்.  மேலும், இந்த அறிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிற 2022 பிப்ரவரி  இதே போன்று ஆய்வுக் கூட்டம் நடத்தப்ப டும். கடந்த காலங்களில் அரசுப் பள்ளிகளில் 66  லட்சம் மாணவர்கள் இருந்தனர். தற்போது  71 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”  இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார், மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் கே.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேரா வூரணி), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), வை. முத்துராஜா (புதுக்கோட்டை), க.சொ.க. கண்ணன் (ஜெயகொண்டம்), நிவேதா முருகன் (பூம்புகார்), மாவட்ட ஊராட்சி தலை வர் உஷா, தஞ்சாவூர், திருச்சி, புதுக் கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த முதன்மை கல்வி அலுவ லர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கூடுதல்  திட்ட அலுவலர்கள், முதன்மை கல்வி அலு வலரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், அரசு அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சாவூர் மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் முன்னறிவிப்பு இன்றி ஆய்வு மேற்கொண்டார்.