திருச்சிராப்பள்ளி, அக்.15 - மத்தியப் பேருந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீர் அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் சனிக்கிழமை சுமார் 3 மணி நேரம் இடைவிடாது கனமழை பெய்தது. இதில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதி களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையத் திற்குள் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்த தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மத்திய பேருந்து நிலைய பொது கழிப்பிடம் அருகே மழை நீர் அதிகளவு தேங்கி இருந்தால், மழைநீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. எனவே பேருந்து நிலையத்திற்குள் மழை நீர் தேங்காத வகையில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.