districts

img

சமாதானப் பேச்சுவார்த்தையில் அராஜகமாக நடந்து கொண்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி சிஐடியு போராட்டம்

மன்னார்குடி, செப்.19 - சமாதானப் பேச்சுவார்த்தையின் போது,  அராஜகமாக நடந்து கொண்ட மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவ டிக்கை எடுக்க கோரி சிஐடியு தொழிற்சங்கத் தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு  தலைமை மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக, சிஐடியு-வுக்கும் மற்றொரு சங்கத்துக்கும் இடையே பிரச் சனை ஏற்பட்டது.  இதுகுறித்த சமாதானப் பேச்சு வார்த்தைக்கு கடந்த செப்.17 அன்று மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பா ளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தையின் இடையே சிஐடியு தொழிற்சங்க தலைவர்களி டம் லத்தியை காண்பித்து, கண்ணிய குறை வான வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ். இத்தகைய அராஜக செயலில் ஈடுபட்ட  அஸ்வத் அன்டோ மீது தமிழக அரசும்,  காவல்துறையும் துறைரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும். அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  மன்னார்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் திங்களன்று (செப்.18) காலை முற்றுகை  போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. இதன் தொடர்ச்சியாக, மன்னார்குடி மற்றும் அதன் அருகிலுள்ள ஊர்களில் இருந்து  நூற்றுக்கணக்கான ஆட்டோ தொழிலா ளர்கள், தங்கள் ஆட்டோ குழுவுடன், மன்னார் குடி தேரடி பெருமாள் கோவில் எதிரில் குவியத் தொடங்கினர். அங்கிருந்து ஊர்வல மாக சென்று  காவல்துணை கண்காணிப்பா ளர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என  அறிவித்திருந்தனர்.  இந்நிலையில் கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் வெள்ளைதுரை, தொழிலா ளர்கள் கூடியிருந்த இடத்திற்கு வந்து சிஐடியு  மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகி யோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் காவல் ஆய்வாளர் எஸ்.ராஜேஷ்  கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையின் முடிவில், காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ  அவ்வாறு லத்தியை காட்டி பேசியிருக்கக் கூடாது என்றும், அவருக்கு உரிய அறிவுரை கள் வழங்குவதாகவும் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை கூறினார். மேலும் அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி சாலையில் ஆட்டோக்களை நிறுத்தும் கோரிக்கைக்கு விரைவில் நல்ல தீர்வு ஏற்ப டுத்தித் தருவதாக வாக்களித்தார். இதன் பேரில், போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. பின்னர் நடைபெற்ற விளக்கக் கூட்டத் திற்கு தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகையன் உரையாற்றினார். நகரச் செய லாளர் அரிகரன் நன்றி கூறினார்.