districts

img

டெல்டா மாவட்டங்களில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை, ஜன.31 - மகாத்மா காந்தியின் நினைவு நாளான  செவ்வாயன்று நாட்டின் பல்வேறு இடங்க ளில் அவரது சிலைக்கு, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,  மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.  அதனொரு பகுதியாக, டெல்டா மாவட் டங்களின் பல்வேறு இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகள், சிறு பான்மை அமைப்புகள் சார்பில் மதநல்லி ணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. அமைப் பின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜான்சன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், உறுதிமொழியை வாசிக்க அதனை மக்கள்  ஒற்றுமை மேடை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ஜோன்ஸ், சந்தானம், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா,  சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கரா ஜன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஏற்றனர்.  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மகாத்மா காந்தியின் உருவச்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நலக்குழு மாவட்டத் தலை வர் வின்சென்ட் தலைமை வகித்தார்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொரு ளாளரும், மாநகரத் தலைவருமான ஹெச். அப்துல் நசீர் தலைமை வகித்தார். நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.குருசாமி உள்ளிட்ட பலர் பேசினர். கும்பகோணம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர்  சு.ப.தமிழழகன் தலைமையில் மதநல்லி ணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் திருவடிக்குடிகள் சாமிகள், இமாம் முஹமது பாகவி, அருட்தந்தை ஜேம்ஸ், மயிலாடுதுறை தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட  ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் காந்தி பூங்கா முன்பு உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணி வேல் தலைமையில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில் வேல், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்  ரவீந்திரன், விவசாய சங்க ஒன்றியச் செய லாளர் தியாகராஜன், சிறுபான்மை நலக் குழு உறுப்பினர் முகமது ரஷீத் உள்ளிட் டோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.