அரியலூர், ஆக.13-
மாமன்னர் ராசேந்திர சோழன் பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெரு வுடையார் திருக்கோயில் வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் சனிக்கிழமை ஆடித் திருவாதிரை விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து உரையாற்றினார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங் கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கங்கை கொண்ட சோழபுரம் ஊராட்சித் தலைவர் சரஸ்வதி வர வேற்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் நன்றி கூறினார்.