districts

img

பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது

திருவள்ளூர், மார்ச் 5- ஏழைகள் மேலும், மேலும் ஏழைகளாக மாற்றிய மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் வேண்டுகோள் விடுத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் திங்க ளன்று (மார்ச் 4), கும்மிடிப்பூண்டி யில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் கும்மிடிப் பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தலைமை தாங்கி னார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது: பாசிச பாஜக ஆட்சியை அகற்ற தேர்தல் மிக சிறந்த ஆயுதமாகும். இதை பயன்படுத்தி இந்த கொடிய வர்களை அகற்றாமல் போனால்,  கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.  கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் என்ன சாதித்தார்கள். எதையாவது சொல்ல முடியுமா,  மக்களை ஏமாற்றலாம்,  மக்களின்  மத உணர்வில் மீது சவாரி செய்ய லாம் என மோடி இறங்கியுள்ளார். சாதாரண மக்கள் ஏற்கெனவே ஏழை களாக இருந்தவர்கள்  மேலும் ஏழை களாக மாறி உள்ளனர். இவர்கள் எப்படி ஏழைகளாக ஆனார்கள், கடந்த 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல்,  ஒரு லிட்டர் டீசல் ரூ.50 விற்றது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் ரூ.100 கடந்து விற்கப்படுகிறது.   உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது,   மிகப்பெரிய அளவிற்கு விலை குறைப்பு செய்திருக்க வேண்டும்.  ஆனால் மோடி அரசு விலையை குறைக்கவில்லை. மேலும், மேலும் விலையை ஏற்றி மக்களிடம் கொள்ளையடித்தார்கள். சமையல் எரிவாயு விலை அதிகரித்து உள்ளது.  தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்துள்ளனர். மிகவும் குறைந்த  கூலியில் தான் மக்கள் வாழ்கையை  நடத்த வேண்டி இருக்கிறது. இப்படி  மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத தால், இந்தியாவில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து வளர்ச்சி என்கிறார்கள். மாறாக முதலாளிகளிக்கு தான் லாபமும், சொத்தும், வருமானமும் அதிகரிகிறது. மோடி ஆட்சியில் ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறி யுள்ளனர். எனவே தான் மோடி ஆட்சி, அகற்ற வேண்டிய ஆட்சியா கும்.  இவ்வாறு அவர் பேசினார்.  இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட குழுவின் சார்பில் தேர்தல் நிதியை கட்சியின்  மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.விஜயன், தலை வர் அ.சவுந்தரராசனிடம் வழங்கி னார்.இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன்,  மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், இ.மோகனா, மாவட்ட குழு உறுப்பி னர் ஜி.சூரியபிரகாஷ், வட்டக் குழு  உறுப்பினர்கள் எம்.ரவிக் குமார் (ஒன்றிய கவுன்சிலர்),  ப.லோகநாதன், எம்.சிவக்குமார், எம்.காமாட்சி, வட்டக் குழு உறுப்பி னர் டி.கோபாலகிருஷ்ணன்  ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மூத்த தலைவர்  அ.சவுந்தரராசனுக்கு நரிக்குற வர்கள் பாசிமணி அணிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.