districts

img

விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதே மோடி அரசின் திட்டம்

தஞ்சாவூர், ஏப்.15 -  இந்தியா கூட்டணியில் தஞ்சாவூர்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடை பெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் நான்கு ரோட்டில் ஞாயிறன்று நடந்த  கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன் பேசியதாவது:  பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத, அதைப் பற்றி சிந்திக்க மாட்டோம், பேச மாட்டோம் என்று கூறும் மோடி  தலைமையிலான பாஜக அரசு  அகற்றப்பட வேண்டும். விலை வாசியை உயர்த்தியது மட்டுமின்றி, தொழில்துறையையும் மோடி அரசு சீரழித்து விட்டது.  ‘வேலைக்கு ஆள் தேவை’ என எப்போதும் விளம்பரப் பலகை தொங்கும் திருப்பூரின் தற்போதைய நிலை என்ன? ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இருந்த வேலையை இழந்த வர்கள், வெளி மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் இடம்பெ யர்ந்து வருகின்றனர்.  மோடி அரசின் மோசமான கொள்கைகளால் தொழில்துறை சீரழிக்கப்பட்டு, தற்போது திருப்பூ ரில் ஏராளமான வீடுகள், கடைகள் காலியாக கிடக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, தொழில் துறை வளர்ச்சிக்கு நல்ல  பல திட்டங்கள் கொண்டு வரப்படும்.  மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த னர். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்தால், 15 ஆண்டுகளில் விவசாயி களின் கைகளில் உள்ள நிலங்கள் அனைத்தும் முதலாளிகளின் கை களுக்கு சென்று விடும். இன்றைக்கு இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாக, விவசாயிகள் அல்லல் படுகின்றனர்.  நிலங்களைப் பறிப்பதே விவசாயம் செய்வதை காட்டி லும், விவசாயம் செய்யாமல் இருப்பதே லாபம் என்றுகூறி, உங்கள் நிலங்களை பறித்து தனியார் முதலாளிகளுக்கும், அவர்களின் தொழிற்சாலைகளுக்கும் கொடுத்து விடுவார்கள். விவசாயிகள், தாங்க ளாகவே விவசாயத்தை கைவிட்டு வெளியேறிச் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வரு கின்றனர். இன்றைக்கு 30 விழுக்காடு  விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாக போட்டுவிட்டு, பக்கத்து ஊர் களுக்கு வேலைக்காக இடம்  பெயர்ந்து விட்டனர். விவசாயி களின் கைகளில் உள்ள நிலங்களை பறித்து, அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.  பெட்ரோல், டீசல், எரிவாயு  விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.  இதனால் விலைவாசி அதிகரித்து உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் எல்.முருகனிடம் செய்தி யாளர்கள், “விலைவாசி அதிகரித் துள்ளதே” என்று கேட்டதற்கு, “ஜெய்  ஸ்ரீ ராம்” என பதில் சொல்லிச் செல்கிறார்.  மக்களை எவ்வளவு காலத்திற்கு  ஏமாற்ற முடியும். சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை குறை யும் போது, இந்தியாவில் மட்டும் எரிபொருட்கள் விலை உயர்வதற்கு என்ன காரணம். மோடி அரசு மக்களை தொடர்ந்து ஏழையாக்கி வருகிறது. நூறு நாள் வேலையை குறைத்து வருகிறார்கள். செய்த வேலைக்கு கூலி கொடுக்க, மாநில அரசுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. ஒன்றிய மோடி அரசு  யாருக்கான அரசு என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி, ஒன்றியச் செயலாளர்கள் கே.அபிமன்னன் (தஞ்சாவூர்), கே. காந்தி (பூதலூர் வடக்கு), சி.பாஸ்கர்  (பூதலூர் தெற்கு), ஏ.ராஜா (திரு வையாறு), திமுக ஒன்றியப் பெருந் தலைவர் எஸ்.செல்லக்கண்ணு உட்பட கூட்டணிக் கட்சியினர் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட னர்.  திமுக நகரச் செயலர் சுபானந்தம் நன்றி கூறினார்.