கும்பகோணம், டிச.7- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செம்மங்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.கண்ணன் எஸ்.அழகர் ஆகியோர் தலைமை வகித்தனர் . திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். சேத்திக்குளம் அங்கன்வாடி எதிரே துணை மின் மாற்றி அமைத்து பொதுமக்கள் சிரமத்தை போக்கிட வேண்டும். ஊராட்சி துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பல வருடமாக பழுதடைந்து காட்சியளிக்கும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். செம்மங்குடி - வேலங்குடி செல்லும் சாலையினை தார் சாலையாக அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது