அரியலூர், ஜூலை 20-
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (43). இவர் கடந்த 30-ஆம் தேதி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜெயங்கொண் டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் வெளியே வந்தால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வா ளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்கலாணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று அரிய லூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆணையிட்ட தின் அடிப்படையில் சுதாகர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.