தஞ்சாவூர், ஆக.20-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பட்டுக்கோட்டை நகரப் பகுதியில் கால்நடை வளர்க்கும் சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித்திரிய விடுகிறார்கள். இதனால் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த இடையூறாக ஏற்படுகிறது.
மேலும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் நகராட்சிக்கு வந்த வாறு உள்ளன. ஏற்கனவே இருமுறை நகராட்சி மூலம் நக ரில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் தொடர்ந்து கால்நடை களை தெருவில் சுற்றித்திரிய விடுகிறார்கள். கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விடுவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரி யும் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு அதன் உரிமையாளர்களி டம் அபராத கட்டணம், பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவ தோடு, காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.