திண்டுக்கல், மார்ச் 2- மதுரை மாவட்டம் அவனி யாபுரம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் சிலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமை யான முருகன் சிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புல ஆய்வு மாணவர் த.வினோத் அவனியாபுரம் பகுதியில் கள ஆய்வு செய்தார். அப்போது, முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மாண வர் வினோத் கூறுகையில், ‘‘தமிழ் தெய்வ வழிபாட்டில் முருகனுக்கென்று தனி இடமுண்டு. குறிஞ்சி நிலத் தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோவில்கள் உள்ளன. பல தனிச் சிலைக ளும் உள்ளன. மதுரை அவனி யாபுரம் புறவழிச்சாலையின் மேற்குப் புறமாக அமைந் துள்ள செம்பன் ஊரணியின் அருகாமையில் இந்த முருகன் சிலை, தலை இல்லா மலும் முன்கைகள் மிகவும் சிதைந்த நிலையிலும் ஒரு மரத்தின் வேருக்கு அருகில் கிடக்கிறது. இதன் உயரம் 60 செ.மீ, அகலம் 50 செ.மீ உள்ளது. கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்களுடன் தோள் மற்றும் கால் அணி கள் அணிந்த நிலையில் மேடையில் இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டபடி சிலை வடிக் கப்பட்டுள்ளது. வலது, இடது கைகளும் சிதைந்துள்ளன. பீடத்தின் கீழ்ப் பகுதியில் நீண்ட தோகையுடன் ஆண் மயில் சிற்பம் வடிக்கப்பட்டுள் ளது’’ என்றார். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், ‘‘இந்த முருகன் சிலையானது, அருகில் உள்ள சிதைந்து போன செவ்வந்தீசு வரர் சிவன் கோயிலைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்தச் சிலையை யாராவது முற்காலத்தில் கொண்டுவந்து இங்கு வைத்திருக்கலாம். சிதைந்து போன வலது கையில் வஜ்ராயுதம் உருக்கு லைந்த நிலையில் தென்படு கிறது. சன்னவீரம் அணிந்து பிற்கால பாண்டியர் கலைப்பா ணியுடன் கூடிய இந்த முரு கன் சிலை கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இவரின் ஆய்வுப் பணி யை ஊக்கப்படுத்தும் விதமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜா.குமார் மாணவ ருக்கு வாழ்த்துகளை தெரிவித் துள்ளார்’’ என்று கூறினார்.