பொன்னமராவதி, ஏப்.25- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் பொன்னமராவதி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு பேரூ ராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் வியாழனன்று மதியம் ஒரு மணியள வில் திடீரென பயங்கரமாக தீப்பற்றி குப்பைகள் எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்து வந்த பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் அதிகாரிகள், பொன்னமரா வதி தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மற்றும் அருகில் இருந்த அம்பலக்காரன் கண்மாயி லிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, பீய்ச்சி தீயை அணைத்தனர்.