districts

img

தமிழ் பல்கலை.யில் பயிலும் ஏழை மாணவர்களுக்காக ரூ.2 லட்சம் நிதி வழங்கிய தமிழறிஞர்

தஞ்சாவூர், ஜன.6 -  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏழை - எளிய மாணவர் களுக்கு, பேராசிரியர் கு.வெ.பால சுப்பிரமணியன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மும், உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து வியாழக்கிழமை நடத்திய,  இலக்கிய, இலக்கணக் கூடுகை நிகழ்வு  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.  இதில் பேரறிஞர் கு.வெ.பாலசுப்பிரமணி யன் மற்றும் அவரது துணைவியார் ரூ.  2 லட்சத்திற்கான காசோலையை துணைவேந் தரிடம் வழங்கினர். “மாணவர்கள் பிழை யின்றி எழுதவும் படிக்கவும் உதவியாக இருக் கும் அடிப்படைத் தமிழ் இலக்கணங்கள் குறித்து” அறிஞர் கு.வெ.பாலசுப்பிரமணி யன் சிறப்புரையாற்றினார்.  பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், மொழிப்புல முதன்மையர் முனைவர் ச. கவிதா, உலகத் திருக்குறள் பேரவையின் செயலாளர் தமிழ்ச்செம்மல் பழ.மாறவர்மன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் தஞ்சாவூரைச் சார்ந்த தமிழ றிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட னர்.