districts

img

பருத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.13- அரசு அதிகாரிகளும், வியாபாரிகளும் சேர்ந்து, சிண்டிகேட் அமைத்து பருத்தி விவசாயிகளை ஏமாற்றி வருவதை தமிழக முதல்வர் கண்டறிந்து அவர்  கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கைகளில் பருத்தியை ஏந்தி யவாறு தமிழக ஏரி மற்றும்  ஆற்றுப் பாசன விவசாயி கள் சங்கம் சார்பில் அரிய லூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்  கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். அங்கு கூட் டத்தில் இருந்த ஆட்சியர் சற்று காத்திருக்கக் கூறிய தால், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங் கின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.