மயிலாடுதுறை, செப்.18 - ஆயப்பாடியில் செயல்படும் அரசு துணை சுகாதார நிலையம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. எனவே புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருக்க ளாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஆயப்பாடி மெயின்ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிற துணை சுகாதார நிலையத்திற்கு ஆயப்பாடி, திருக்களாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெறுவதற்கும், ஆலோ சனைகள் பெறுவதற்கும் தினமும் வந்து செல்கின்றனர். மேலும் முதலுதவி போன்ற சிகிச்சைகளும், மாதாந்திர மாத்திரை-மருந்துகளும் இந்த மையத்தில் வழங்கப்படுவதால் எண்ணற்ற ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஆனால் துணை சுகாதார நிலையம் இயங்கிவரும் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டு களாகிவிட்டது. இதனால் இடிந்து விழும் நிலையில், மிகவும் சேத மடைந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அதேபோன்று இங்கு பணி யாற்றும் ஊழியர்களும் அச்சத்து டனேயே பணியாற்றி வருகின்ற னர். எனவே பாழடைந்து மிகவும் மோசமாக உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர நடவ டிக்கை வேண்டுமென சமூக ஆர்வ லரான ஆயப்பாடியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித் துள்ளார்.