பாஜக நிர்வாகி கைது
திருச்சிராப்பள்ளி, ஜன.29 - முஸ்லிம் செயற்பாட்டாள ரும், அரசியல்வாதியுமான பொள்ளாச்சியை சேர்ந்த பழனிபாபா கடந்த 1997 ஜன வரி 28 அன்று 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பழனிபாபா நினைவு தினம் ஆண்டுதோறும் ஜன. 28 அன்று அவரது ஆதரவா ளர்களால் கடைப்பிடிக்கப்படு கிறது. இந்நிலையில், பழனி பாபா நினைவு தினமான ஞாயி றன்று, அவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி உறை யூரைச் சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப் பிரிவின் மாநிலச் செயலாளர் புகழ் என்ற புகழ் மச்சேந்திரன் மீது உறையூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
ரத்த தான முகாம்
அறந்தாங்கி, ஜன.29 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக பாதுகாப்புத் துறை இளைஞர் நீதிக்குழும உறுப்பி னர் ராபியத்துல் பஸரிய்யா மற்றும் காவல் ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு 35 யூனிட் ரத்தத்தை, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கினர். ரத்தம் வழங்கியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறந் தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங் கினார்.
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பாபநாசம், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட் டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, குண்டூரில் புதிய நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடந்தது. கொள் முதல் நிலையத்தை அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் திறந்து வைத்தார். திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ் குத்து விளக்கேற்றினார். மாவட்டக் கவுன்சிலர் ராதிகா, ஒன்றியக் கவுன்சிலர் சுமித்ரா, ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார், உறுப்பினர்கள், விவ சாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
நாளை எரிவாயு குறைதீர் கூட்டம்
கரூர், ஜன.29 - கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறு வன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் எரி வாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவ லர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 31.01.2024 (புதன்) அன்று மாலை 3 மணி யளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார் களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
நெற்பயிர்களில் பாசன நீர் மேலாண்மை: வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு
தஞ்சாவூர், ஜன.29- பேராவூரணி வட்டாரத்தில் சம்பா தாளடி நெற்பயிர்களில் பாசன நீர் மேலாண்மை குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டா ரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 5,166 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,250 ஹெக்டேர் பரப்பளவில் ஆற்று நீர் பாசனம் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னவாசல், சித்தாதிக்காடு, களத்தூர் மேற்கு, சூரியநாராயணபுரம் பகுதியில் ஆற்று நீர்ப் பாசனம் பெற்று வந்த நிலையில், சுமார் 750 ஏக்கர் நெல்பயிர்கள் பால்பிடிக்கும் மற்றும் முதிர்ச்சியடையும் நிலையில் உள்ளன. இப்பகுதியில் பாசன நீர் மேலாண்மை மற்றும் அறுவடை வரை பயிர்களை காப் பாற்றுவது குறித்த வழிமுறைகளுக்காக வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, நீர்வளத்துறை, வேளாண்மை பொறி யியல் துறை, வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை துணை இயக்குநர் (மாநி லத் திட்டம்) சுஜாதா தலைமையில், வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரி யர் அருண்குமார், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி, தோட்டக் கலை உதவி இயக்குநர் வள்ளியம்மாள், வேளாண்மை பொறியியல் துறை இளநிலை பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறி யாளர்கள் செங்கோல், காதர் ஒலி அடங்கிய இக்குழுவினர் மேற்படி கிராமங்களில் பாசன நீர் மேலாண்மை முறைகள் குறித்தும், விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பால்பிடிக்கும் மற்றும் முதிர்ச்சி அடையும் தருணத்தில் உள்ள நெற்பயிரில் உரிய பாசன மேலாண்மை முறைகளை கடைப் பிடிப்பதன் மூலம் சராசரியான மகசூல் எடுக்க இயலும். இதனடிப்படையில், தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு சதவீத பிபிஎப்எம் நுண்ணுயிர் கலவை அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசல் - இவற்றில் ஏதேனும் ஒன்றை மாலை வேளை யில் பயிர்கள் நன்கு நனையும்படி தெளிப்ப தன் மூலம் பயிரின் வளர்ச்சி பேணப்படும். மேலும், அறுவடை நிலைக்கு கொண்டு சென்று சராசரியான மகசூல் அடைய முடியும் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.
மாநில அளவில் சிறுவர்களுக்கு சதுரங்கப் போட்டி
பாபநாசம், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசத்தை அடுத்த கபிஸ்தலம் ஆர்.எஸ். மஹாலில் 11 ஆம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு, பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சது ரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான சது ரங்கப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ரோட்டரி உதவி ஆளுநர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் செந்தில்குமரன், துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலை வர்கள் செந்தில்நாதன், சீனிவாசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ரோட்ராக்ட் குழுத் தலைவர் திருப்பதி போட்டியை துவக்கி வைத்து பேசினார். போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு மாவட்ட நிர்வாக செயலாளர் செந்தில்குமார், கபிஸ்தலம் ஆர்.எஸ்.மஹால் உரிமையாளர் இளங்கோவன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்ற னர். 9,11,13,17 வயதுக்கு உள்பட்ட பிரிவு களில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் செல்வகுமார் வர வேற்றார். மாவட்ட சதுரங்கக் கழக செய லாளர் தர்ம.சிலம்பரசன் நன்றி கூறினார்.
வேங்கைவயல் வழக்கு பிப்.12-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, ஜன.29 - வேங்கைவயல் சம்பவத்தில், 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி போலீ சாரின் மனு மீதான விசாரணை பிப்.12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டிய லினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட் டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரும் மனுவை சிபிசிஐடி போலீ சார் மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தனர். அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து பிப்.12 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.
முதல்வர் குறித்து அவதூறு: போலீசார் விசாரணை
திருச்சிராப்பள்ளி, ஜன.29 - திருச்சி திருவானைகோவில் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (64). இவர் தொமுச மாநில பேரவை செயலாள ராக உள்ளார். இவர் திருச்சி மாநகர் சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “கோல்டன் பிக்சர்ஸ் யூடியூப் சேனல் என்ற இணைய தளத்தில் இருந்து தனது செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு செய்தி வந்தது. அதில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணத்தை அவதூறாக சித்தரித்து தகவல்களை பரப்பியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த சேனலின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனவும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைமில் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நபரை தேடி வரு கின்றனர்.
நீரில் மூழ்கிய நிலையில் சாமி சிலை கண்டெடுப்பு
திருச்சிராப்பள்ளி, ஜன.29 - திருச்சி மேல சிந்தாமணி - மாம்பழச்சாலையை இணைக் கும் காவிரி பாலத்தின் அடியில் தண்ணீரில் பாதி மூழ்கிய நிலையில் சுமார் மூன்றடி உயரமுடைய, கையில் உடைந்த அரிவாள் ஏந்திய நிலையில் மதுரை வீரன் சிலை ஒன்று காணப்பட்டது. ஆற்றின் நடுவே சிலை வருவதற்கு சாத்தியமில்லை. எனவே யாரேனும் இந்த சிலையை கடத்தி வந்து ஆற்றில் வீசிவிட்டு சென்றார்களா? இது எந்த கோயில் சிலை என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சிலை வடிவமைப்பு பழங்கால சிலை வடிவ மைப்பை ஒத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் சிலை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சிலையை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர்கல்வி வழிகாட்டல் களப்பயணம்
அறந்தாங்கி, ஜன.29 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் இந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்கான ஆர்வத்தை ஊட்டும் கையில், மாணவர்கள் அரசு கலை கல்லூரி களுக்கு களப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். அறந்தாங்கி அரசு கல்லூரி முதல்வர்(பொ) பேரா சிரியர் வி.பாலமுருகன் களப்பயணத்தை தொடங்கி வைத்தார். அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அலகு 1 பழனித்துரை, அலகு 2 முனைவர் ரமேஷ், ரெட் ரில் கிளாஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் வரவேற்றனர். இந்நிகழ்வில் துறை வாரியாக பாடப் பிரிவுகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மணமேல்குடி ஒன்றி யத்தில் 187 மாணவர்கள் களப்பயணத்தில் பங்கேற்ற னர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோ கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வாரியாக கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை அருகே வேன் டயர் வெடித்து விபத்து: ஒருவர் பலி; 15 பேர் படுகாயம்
தஞ்சாவூர், ஜன.29 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பண்டிகை சோழ நல்லூர் என்ற கிராமத்தில் இருந்து, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஊரணிபுரத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக 15-க்கும் மேற்பட்டோர் வேனில் வந்துள் ளனர். பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் என்ற இடத்தில் வரும்போது திடீரென டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து வேன் நடுரோட்டிலேயே கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த அனைவருக்கும் கை, கால், தலை, முதுகு, முகம் என படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய சண்முகம் (38) சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். மேலும் மேகநாதன் (24), ரெஜினா (24), பிரசாத் (31), தங்கையன் (49), கருப்பையா (80), காளிமுத்து (19), முனியம்மா (55), சக்திவேல் (24), பிரேமா (33), முத்துலட்சுமி (40) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலைவிழா
பாபநாசம், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா நடை பெற்றது. அந்தி முதல் விடியல் வரை நடைபெற்ற விழாவில் மாலை வரவேற்பு இசை, இசை சங்கம், நை யாண்டி மேளம், காவடி ஆட்டம், பறையும் பரதமும், வாண வேடிக்கை, புதுமையான பொம்மலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், துடும்பாட் டம், கம்பன் விளையாட்டுக் கழகத்தினர் வழங்கிய சாகச நிகழ்ச்சிகள், நல்லிச்சேரி திருத்தணி குழு வினரின் தமிழ் மண் இசை நடைபெற்றது. இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் செங்குட்டு வன், தமிழ்பால் செயல் இயக்குநர் தியாகராஜன், பாபநாசம் பெனிபிட் பண்ட் தலைவர் ஆறுமுகம், குடந்தை ரத்த தான டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஷேக் தாவூத், தஞ்சாவூர் டாக்டர் முஹமது ஆசாத் அலி, கும்பகோணம் காந்தியடிகள் நற்பணி கழக பாலசுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் விழா பேருரை ஆற்றினார். இதில் ஏராள மான பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை தந்தை பெரியார் அறிவியல் கலை பண்பாட்டு விளையாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
அரியலூர், ஜன.29 - அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற் பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயங் கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் விமலா தலைமையிலான காவல் துறையினர், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் அர சால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய் தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் ஜெயங் கொண்டம் தேவாங்கர் நடுத்தெ ருவை சேர்ந்த பாலமுருகன் (48) என்பது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்து, அவர் வைத்திருந்த 8 லாட்டரி சீட்டுகள், பதிவு எண்கள் மற்றும் செல்போன், ரொக்கம் ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பேனர் விழுந்து இளைஞர் காயம் அதிமுக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர், ஜன.29- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வர வேற்க சாலையோ ரங்களில், ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் மிகப் பெரிய அளவில் வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், ஒரத்த நாடு அருகே புலவன் காட்டை சேர்ந்த கபில்தேவ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பிளக்ஸ் பேனர் விழுந்து படுகாய மடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து ஒரத்த நாடு கடைவீதி, யூனியன் அலுவலகம் எதிரே, பேருந்து நிலையம் என நகரம் முழுவதும் அனுமதி யின்றி ஏராளமான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்ததாக, கொள்கை பரப்பு துணை செயலா ளர் துரை.திருஞானம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 15 பேர் மீது ஒரத்தநாடு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல பட்டுக் கோட்டை, திருவிடைமரு தூர், வல்லம், செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் அனு மதியின்றி பிளக்ஸ் வைத்த நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நில அளவை விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் திருவாரூர் ஆட்சியர் தகவல்
திருவாரூர், ஜன.29 - நில அளவை விவரங்களை இணைய சேவை மூலம் தெரிந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லா மல், இணையவழியில் https://tamilnilam.tn.gov.in/ citizen விண்ணப்பிக்கும் புதிய வசதி தமிழ்நாடு முதல மைச்சரால் கடந்த டிசம்பர் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும், நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கி களுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும் நிலஅளவை செய்யப்பட்ட பின்னர், நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை-வரைபடம் ஆகியவற்றை மனு தாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையம் மூல மாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நில அளவரால் பதி வேற்றம் செய்யப்படும் இத்திட்டத்தை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.