districts

img

பட்டா பெற 35 ஆண்டுகள் அலைந்த விவசாயி மக்களுடன் முதல்வர் திட்டத்தால் தீர்வு கிடைத்தது

தஞ்சாவூர், பிப்.5-  தனக்கு சொந்தமான 21 செண்ட் விவசாய நிலத்திற்கு பட்டா பெறுவதற்காக, தனது 28  வயதில் தொடங்கி, 35 ஆண்டு களாக அலைந்த விவசாயிக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சி அடைந் துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், வளையப்பேட்டை ஊராட்சி மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சந்திர சேகரன் (63). இவர் தனது 21 செண்ட் விவ சாய நிலத்திற்கு பட்டா வழங்க கோரி, கடந்த 20.12.2023 அன்று, வளையப்பேட்டை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனு அளித்தார்.  மனுவினை பரிசீலித்த அலுவ லர்கள், மனு ஏற்கப்பட்டதாக மனுதார ருக்கு குறுஞ்செய்தி அனுப்பினர். கடந்த ஜன.2 அன்று பட்டா வழங்கப் பட்டதாக மறு குறுஞ்செய்தி மனுதார ருக்கு அனுப்பப்பட்டது.  இதையடுத்து விவசாயி சந்திரசேகரன், தனக்கான  பட்டா மாறுதல் ஆணையினை இணை யதளம் வழியாக பெற்றார்.  தனது 35 ஆண்டுகள் கனவு நிறை வேறியதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனது கோரிக்கையை உடனே நிறைவேற்றி பட்டா மாறுதல் ஆணை வழங்கிய தமிழ்நாடு  முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோருக்கு விவசாயி சந்திர சேகரன் நன்றி தெரிவித்ததுடன், மக்களுடன்  முதல்வர் திட்டத்தால்தான் பயனடைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.