districts

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பிரச்சனையில் தீர்வு

சிபிஎம் தலையீட்டால் கிடைத்தது

   பொன்னமராவதி, ஏப்.20- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் ராஜாமணி-குமார் மற்றும் நாச்சம்மை-பிரம்மன் தம்பதியினர். இந்த இரு குடும்பங்களையும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த னர்.  

   இந்நிலையில், அந்த இரு குடும்பமும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் முன்னிலையில் கட்சியில் இணைந் தன. இதையடுத்து கட்சியின் வழிகாட்டுத லின்படி பொன்னமராவதி வட்டாட்சியரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர்.  

   இதனடிப்படையில், ஏப்ரல் 17 அன்று  பொன்னமராவதி வட்டாட்சியர் முன்னிலை யில், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில், ராஜாமணி, நாச்சம்மை  குடும்பத்தினர் அனைத்து பொது நிகழ்வுகளி லும், விழாக்களிலும் கலந்து கொள்ள அனு மதிக்க வேண்டும். அவர்களிடமிருந்து கட்ட  மொய் தொகை பெற வேண்டும். ஊராட்கள்  திருப்பி தரச் சொல்லி வாங்கிச் சென்ற  ஊர்ப் பணத்தை அவர்களிடமே ஒப்படைக்க  வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.