தஞ்சாவூர், ஏப்.23- தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். தஞ்சாவூர் பூச்சந்தை அருகே ‘தோழர் பழக்கடை’ என்ற பெயரில் பழ வியாபாரம் செய்து வருபவர் என்.ஹாஜாமொய்தீன் (64). இவர் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப் பழங்கள், நெல்லிக்காய் உள்ளிட்ட அனைத்து வகை பழங்களையும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் உலக புத்தக தினத்தை யொட்டி ஹாஜாமொய்தீன் பூச்சந்தையில் உள்ள கணேச வித்யாலயா உதவிபெறும் நடு நிலைப் பள்ளியில் பயிலும் 120 மாணவர் களுக்கு, செவ்வாய்க்கிழமை பொது அறிவு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியை அல்லி ராணி, ஆசிரியர்கள் புகழேந்தி, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தகம் படிக்க ஆர்வம் இதுகுறித்து பழக்கடைக்காரர் ஹாஜா மொய்தீன் கூறுகையில், “நான் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் வாடிக்கையாளர் களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இதில் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வர லாறு, சித்த மருத்துவம், சமையல் குறிப்பு கள், பொது அறிவு புத்தங்கள், பிற மொழி களை கற்றுக் கொள்வது உள்ளிட்ட ஏராள மான தலைப்புகளில் புத்தகங்களை வழங்கி வருகிறேன். என்னிடம் பழங்களை வாங்கும் போது, அவர்களுக்கு புத்தகங்கள் மட்டுமல்லாது, முதலில் குடிக்க தண்ணீர் பாட்டில்களை வழங்குகிறேன். பின்னர் பழங்களோடு குங்கு மச்சிமிழ், ஊதுபத்தி ஸ்டாண்ட் போன்ற பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இந்த ஆண்டு உலக புத்தக தினத்தையொட்டி, அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் 120 பேருக்கு இலவசமாக புத்த கங்களை வழங்கி, அவர்கள் கோடை விடு முறையை பயனுள்ளதாக கழிக்க அறி வுறுத்தினேன். தொலைக்காட்சி, செல்போன் வரவால் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது. இதிலிருந்து பொதுமக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் புத்தகங்களை வாடிக்கையாளர்களுக்கு தினமும் வழங்கி வருகிறேன். இதன்மூலம் இளைய தலை முறையினருக்கு புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறேன்” என்றார்.