திருநெல்வேலி, மே 26-
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே குடியிருந்து வருபவர் முத்துகிருஷ்ணன், இவர் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தனது குழந்தைக்கு பேக்கிங் செய்யப்பட்ட சோன் பப்படி 250 கிராம் ரூபாய் 57 /- கொடுத்து வாங்கியுள்ளார்.
அதனை பயன்படுத்திய போது பேக்கிங் செய்யப்பட்ட சோன்பப்படிக்குள் வெள்ளை கலரில் நீளமான ரப்பர் பேண்ட் இருந்துள்ளது. இதனை கண்ட முத்துகிருஷ்ணன் அதிர்ச்சி யடைந்து விட்டார். முத்துகிருஷ்ணனும் மேற்படி தனியார் நிறுவனத்திடம் சோன்பப்படிக்குள் கிடந்த ரப்பர் பேண்டை காட்டி சோன்பப்படியை மாற்றம் செய்து தருமாறும் அல்லது அதற்குரிய தொகை ரூ.57ஐ திரும்பத் தருமாறு கேட்டுள்ளார் ,
ஆனால் மேற்படி தனியார் சூப்பர் மார்கெட் மற்றம் செய்து தர மறுத்து விட்டதால் முத்துகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தனியார் சூப்பர் மார்கெட் சோன்பப்படி தயாரிக்க வில்லை என்றும் இதனை தயார் செய்த ஹால்டிராம் (Haldiram Food international) நிறுவனம் தான் சோன்பப்படி மாற்றி தர முடியும் என்றும் தனியார் நிறுவனத்தால் மாற்றித் தர இயலாது என்றும் தெரிவித்து விட்டார்கள்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துகிருஷ்ணன் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தாக்கல் செய்தார் வழக்கை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வழக்கை விசாரணை செய்துமுத்து கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 20,000்வழக்கு செலவு ரூ.3000 சேர்த்து சோன் பப்படி தயரித்தநிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.