அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து பெண் என்றும் பாராமல்தாக்கிய ரவுடி முருகானந்தத்தை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தே.பிரபாகர், மாநில துணைத்தலைவர் கி.செந்தில் முருகன், மாவட்ட நிர்வாகிகள் தெ.இந்திரா குமார், பெ. தேவராஜன், இரா.சக்திவேல்,கள்ளக்குறிச்சிகோட்டத் தலைவர் ர. ராஜா, செயலாளர் நா. நடராஜ்,திருக்கோவிலூர் கோட்டத் தலைவர் ஷ.முகமது ஷெரீப்,செயலாளர் சே.ரவிச்சந்திரன், மற்றும் சகோதர சங்கத்தலைவர்கள் பங்கேற்றனர்.