districts

img

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

தஞ்சாவூர், அக்.4 -  சேதுபாவாசத்திரம் அருகே வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமையை மீனவர் மீண்டும் கடலில் விட்டார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுத்தெரு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகன் ராஜா. மீனவரான இவர் புதுத்தெரு கடல் பகுதியில் தமது நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, கரை திரும்பினார். அப்போது, வலையில்‌ அரிய வகை கடல் ஆமை ஒன்று சிக்கி இருந்ததை பார்த்தார்‌.  கடல்வாழ் அரிய வகை உயிரினங்களான கடல் குதிரை, கடல் அட்டை, கடல் ஆமை உள்ளிட்டவற்றை பிடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளதால், வலையில் சிக்கிய ஆமை உயிருடன் இருப்பதை உறுதி செய்த மீனவர் ராஜா, வலையிலிருந்து பிரித்து மீண்டும் ஆமையை கடலுக்குள்‌ விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மீனவர் ராஜாவை பாராட்டினர்.