districts

img

விவசாயிகளை அலட்சியப்படுத்தும் கொள்முதல் நிலைய அலுவலர்

நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கும் அவலம் மயிலாடுதுறை, பிப்.17 - தனியார் வியாபாரிகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து, ஏழை விவசாயிகளை அலட்சியப்படுத்தும் கொள்முதல் நிலை  பட்டியல் எழுத்தர் மீது ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் கிடங்கல் (மாமாகுடி) கிராமத் திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் எடுக்காமல், தனியார் வியா பாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக வும், நெல் மூட்டைகளை மையத்தில் அடுக்கி வைத்து காத்துக் கிடப்பதாக வும் அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி யுள்ளனர். மாமாகுடி கிராமத்தில் இயங்கி வருகிற நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில், சுற்றியுள்ள கிராமங்களான கிடங்கல், குமாரக்குடி, செம்பரம்பாக்கம்,  மாமாக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மையத்தின் பட்டியல் எழுத்தர் எனப்படுகிற நிலை யத்தின் அலுவலர், விவசாயிகள் நெல்  மூட்டை ஒன்றுக்கு 45 ரூபாயை கட்டாய மாக தர வேண்டுமென வற்புறுத்தி, சுமை  தூக்கும் தொழிலாளர்கள் வாயிலாக பணத்தை முன்கூட்டியே ரொக்கமாக அளித்தால்தான் பில் போட்டு தருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், ஒவ் வொரு நெல் மூட்டைக்கும் அரசு நிர்ண யித்துள்ள எடை அளவைத் தாண்டி கூடுத லாக 2 கிலோ சேர்த்து எடை போடுவ தாகவும் குமுறுகின்றனர். அதுமட்டுமின்றி, பல நாட்களாக நெல்  மூட்டைகளை நிலையங்களில் அடுக்கி வைத்து  விவசாயிகள் காத்திருக்கும் சூழ லில், தனியார் வியாபாரிகள் மூட்டை ஒன்றுக்கு ரூ.50-க்கும் மேல் தருவதால் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கு வதாகவும், விவசாயிகளை அலட்சியப் படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்ற னர். இதுகுறித்து கேள்வி கேட்பவர்களை பட்டியல் எழுத்தர் அநாகரிகமாக பேசுவ தாகவும் கூறுகின்றனர்.  விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான், ஒவ்வொரு பகுதி யிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படு கிறது. ஆனால் ஒரு சில அதிகாரிகள்  பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில்  விவசாயிகளை அலட்சியப்படுத்துவ தால், தமிழ்நாடு அரசிற்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கிடங்கல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மீது  நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் எடுப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பாரா? மழையும் கை கொடுக்காமல், மேட்டூர்  அணையிலிருந்து தண்ணீரும் கிடைக்கா மல் விவசாயிகள் கவலையில் உள்ள இந்நிலையில், ஏற்கனவே விளைவித்த நெற் பயிர்களை விற்பனை செய்ய முடியாமல் இருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.