பாபநாசம், மே 13 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டையை அடுத்த அருந்தவபுரத்தில் அம்மா பேட்டை வட்டார வேளாண், உழ வர் நலத் துறை சார்பில் செல்வ கணபதியின் தென் னந்தோப்பில் தென்னை யைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செயல் விளக்கம் நடந்தது.
இதில் வாடல் நோய் மற்றும் சிகப்பு கூன் வண்டு, காண்டா மிருக வண்டு போன்றவை தென்னையை தாக்குவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதற்குரிய மேலாண்மை தொழிற் நுட்பம் குறித்தும் விளக்கம் அளிக் கப்பட்டது. பின்னர் தென்னை யில் ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அறிகுறி, மற்றும் அதற்குரிய ஒருங்கிணைந்த மேலாண்மை தொழிற்நுட்பம் குறித்தும் கூறப்பட்டது. தென்னையில் ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அறிகுறி தென்படும் பகுதியில் ராக்கர் ஸ்பிரே யர் (விசைத் தெளிப்பான்) மூலம் மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் முறை செய்து காண்பிக் கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா, தஞ்சாவூர் வேளாண், உழவர் நலத் துறை உணவு ஊட்டச்சத்து இயக்க ஆலோசகர் இளஞ் செழியன், அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன், தோட்டக் கலை உதவிஇயக்குநர் பரி மேலழகன், வேளாண் அலுவலர் பிரியா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.