தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கணபதி அக்ரஹாரத்தில் புதிய ரேசன் கட்டிடம் கட்டப்பட்டது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். ஆனால் தற்போது வரை இக்கடை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.