திருநெல்வேலி, ஜுலை 30-
நெல்லயை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதி யைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி ( 40), மகள் இசக்கியம்மாள் (19). இவர்கள் 2 பேரும் கடந்த 24-ந் தேதி தேவர் குளம்-கயத்தாறு ரோட்டில் மொபட்டில் சென்று கொண் டிருந்தனர். அப்போது அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே எதிர் பாராத விதமாக மொபட் கவிழ்ந்தது. இதில் தாய்- மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பல னின்றி சனிக்கிழமை இரவு செல்வி பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து தேவர் குளம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.