முசிறி, ஜூலை 30-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் அருகே அரியனாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திர போஸ். சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) இவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் உள்ளனர். மஞ்சுளா கடந்த ஆறு வருடங்களாக ஊர்காவல் படை யில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுளா விற்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு வரு டமாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
தாய் அன்னக்கிளியின் பராமரிப்பில் சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி கிராமத்தில் இருந்த மஞ்சுளா வை தாய் அன்னக்கிளி கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை பெற மனுக் கொடுக்க அரியனாம்பேட்டை கிரா மத்திற்கு அழைத்து வந்துளார். கலைஞர் மகளிர் உரி மைத்தொகை மனு பதிவு செய்வது தொடர்பான வேலை கள் முடிந்த நிலையில் மருத்துவச் சிகிச்சை மேற் கொள்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என தாய் அன்னக்கிளி அழைத்துள்ளார். ஆனால் மஞ்சுளா சிகிச்சைக்கு வர மறுத்தது தகராறு செய்துள்ளார். இதனால் தாய் அன்னக் கிளி கோபமடைந்து மஞ்சுளாவின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் மஞ்சளா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.