districts

img

அழகிரி பள்ளியில் மாறுவேடப் போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப் போட்டி நடந்தது. இதில் எல்கேஜி முதல் 2 ஆம் வகுப்பு வரையிலான 116 மாணவர்கள் பாரதியார், அப்துல் கலாம், பாரதத் தாய், வழக்கறிஞர், காவல் துறையினர் உட்பட பல்வேறு மாறுவேடங்களில் வந்து திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மாறுவேடமிட்ட மாணவர்களை பள்ளித் தலைமையாசிரியர் தீபக், உதவி தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.