districts

img

பேராவூரணியில் 2 வருடங்களாக வீடு புகுந்து திருடிய நபர் கைது

தஞ்சாவூர், டிச.21 -  பேராவூரணி பகுதி யில் கடந்த இரண்டு வரு டங்களாக வீடு புகுந்து திருடி வந்த முகமூடித் திரு டன் கைது செய்யப்பட்டான்.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை உள்கோட் டம், பேராவூரணி காவல் நிலைய சரகத்திற்கு உட் பட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்று வந்தது.  இது குறித்து பாதிக்கப் பட்டவர்கள், பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலையங்களில் புகார் அளித் தனர். புகாரின் பேரில் பட்டுக் கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ் சவுகான் உத்தர வின் பேரில், பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர் மேற்பார்வை யில், உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது சேலத்தில் வசித்து வருப வருமான ஜெயசூர்யா எனத் தெரியவந்தது.  இதையடுத்து, அவரை கைது செய்து காவல் துறை யினர் விசாரணை நடத்தினர்.  இதில் பேராவூரணி  என். எஸ்.என் டவர் பகுதியில் வசித்து வரும் பவித்ரா, பேராவூரணி மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் நீலாவதி, பட்டுக் கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட் பட்ட கோட்டாகுடி பகுதி யில் வசித்து வரும் செல்லை யன்,  சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட புதுப்பட்டினம் பகு தியில் வசித்து வரும் வெண்ணிலா ஆகியோர் களது வீட்டில் இருந்து, முக மூடி அணிந்து, இரவு நேரத் தில் வீடு புகுந்து தங்க நகை கள், வெள்ளி நகைகள் மற் றும் செல்போன்களை திருடிச் சென்றது தெரியவந்தது.  இதையடுத்து அவரை கைது செய்து அவரிட மிருந்து சுமார் 10 சவரன் தங்க நகைகளை காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.