districts

img

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், சமூக விரோதிகள், சட்ட விரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது. பாபநாசம் டி.எஸ்.பி அசோக் தலைமையில் நடந்த அணிவகுப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர். பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு, மெயின் சாலை வழியாகச் சென்றது.