திருவாரூர், ஜூலை 17-
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சேங் காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப் பட்டது.
2023 ஏப்ரல் மாதம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் போது, பள்ளி யில் சேருகிற அனைத்து மாணவர்களுக்கும் நிச்சயப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திராணி, அப் பகுதியில் உள்ள வீடுக ளுக்குச் சென்று துண்ட றிக்கை வழங்கி மாணவர் களை ஊக்கப்படுத்தினார்.
இதன்படி, ஜூலை 15 அன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன் றாம் வகுப்பு மாணவி மு. விஷாலினிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற மாண வர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற தலை வர் ஆர்.கண்ணன், பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஜி.ஜெயராமன், கௌரவ தலைவர் வி. கோவிந்தராஜன் மற்றும் பள்ளி மாணவர்கள், பெற் றோர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மாணவர் சேர்க்கையின் போது கொடுத்த வாக்குறு திப்படி, மாணவி ஒருவருக்கு தங்கம் வழங்கிய ஆசிரி யர் இந்திராணிக்கு அனை வரும் பாராட்டு தெரிவித்த னர்.