districts

img

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொலை: மாதர், வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9- புதுச்சேரியில் 9 வயது  பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக் கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்ப வத்திற்கு நீதி கேட்டும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும். குற்றவாளி களுக்கு அதிகபட்ச தண் டனை வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் மற்றும் வாலி பர் சங்கம் சார்பில் திருச்சி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு பொன்மலை பகுதி தலைவர்  சித்ரா தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டத் தலைவர் லெனின், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செய லாளர் கார்த்திகேயன், அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் மாவட்டச் செய லாளர் ரங்கராஜன், மாதர்  சங்கம் மாவட்டச் செயலா ளர் சரஸ்வதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.