மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமா வரவேற்றார். நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் 192 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி உரையாற்றினார்.