districts

திருச்சி முக்கிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை: சிறுமி தற்கொலை முயற்சி வாலிபர் கைது; தாய்-தந்தை தலைமறைவு

அரியலூர், ஜன.16 - ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி  வன்கொடுமை செய்த வாலிபர் கைதானார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு  (20). கூலி தொழிலாளியான இவர், 17 வயது சிறுமி ஒரு வரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, தனது தாய்- தந்தையருக்கு தெரிந்தே தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமியின்  பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில், சிறுமி மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜெயங் கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் சிறுமி புகார் அளித்தார். புகாரின்பேரில் அனைத்து காவல் ஆய்வாளர் சுமதி, குற்றவாளி ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த  ராஜூவின் தந்தை சீனிவாசன், அவரது தாய் ஜெய ராணி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்தனர். மேலும், சீனி வாசனை கைது செய்து, தலைமறைவாக உள்ள ராஜு  மற்றும் அவரது தாய் ஜெயராணி ஆகியோரை தேடி வரு கின்றனர்.

ஜெயங்கொண்டத்தில்  எஸ்.பி., திடீர் ஆய்வு

அரியலூர், ஜன.16 - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலை மையிலான போலீசார், ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். புதி தாக பொறுப்பேற்றுள்ள அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், கடைவீதி உள்ளிட்ட பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 

சிபிஎம் நிதி வசூல் 

தஞ்சாவூர், ஜன.16-  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் அம்மை யகரத்தில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் கட்சி நிதி  வசூல் நடைபெற்றது. பொதுமக்கள் கட்சிக்கு ஆர்வமு டன் நிதி வழங்கினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

சாலையில் பொங்கல் வாழ்த்து  எழுதியதில் தகராறு  இளைஞர் அடித்துக் கொலை

தஞ்சாவூர், ஜன.16 -  சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியது தொடர்பாக  திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில் இளை ஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சாலைக்காரத் தெரு உரக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூண்டித் தெருவைச் சேர்ந்த  அசோக்குமார் (36), முனியப்பன் (27), அய்யப்பன் ஆகி யோர் ‘பொங்கல் வாழ்த்து’ என சுண்ணாம்பால் எழுதிக் கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அருள்மொழிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுரு கன் (22), ஆகாஷ் (24) வழிவிடுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் பாலமுருகனும், ஆகாஷும் புறப்பட்டு  தங்களது கிராமத்துக்குச் சென்று, திங்களன்று அதிகாலை  1.30 மணியளவில் மேலும் சிலரை திரட்டிக் கொண்டு  மாரியம்மன் கோவில் சாலைக்காரத் தெருவுக்கு வந்தனர்.  அங்கிருந்த அசோக்குமாரையும், முனியப்பனையும் கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த  முனியப்பன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலை யத்தினர் வழக்குப் பதிந்து ஆகாஷ் (24), பாலமுருகன் (22),  இவரது அண்ணன் பாலகுமார் (24), விஜய் (23), சதீஷ் குமார் (29), வினோத் (27) ஆகிய 6 பேரை கைது செய்த னர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி, ஜன.  16  தூத்துக்குடியில் இருந்து  கஞ்சா, குட்கா,  மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு  அவ்வப்போது கடத்தப்படுகின்றன.  அதனை  தடுக்க கடலோர காவல்படையினரும், போலீ சாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி சிலுவை பட்டி  கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், அப்பகுதி கடற்கரைக்குச் செல்லும் உப்பளம் பாதை  அருகே தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறை லோடு வேனில் இருந்து ஒரு சிலர் போலீசாரைக் கண்டதும் வாக னத்தை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து போலீசார் அந்த வேனை சோதனையிட்டபோது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக  கொண்டு வரப்பட்ட சுமார்  35 கிலோ எடை கொண்ட 76 மூடை பீடி இலை கள், சுமார் 57 ஆயிரம் வலி நிவராணி மாத்தி ரைகள் ஆகியவற்றை கைப்பற்றி, கடத்த லுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்,  லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

தமிழ் திருமுறைகளுக்கு மரியாதை  செலுத்தும் கொல்லங்கரை மக்கள்

தஞ்சாவூர், ஜன.16 -  தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல் லங்கரை கிராமத்தில் தமிழ் திருமுறை களான தேவாரம், திருவாசகம் நூல்களுக்கு  வீடுகள் தோறும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கொல் லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களை ஊரில் உள்ள  பெரியவர்கள் சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வை தொடங்குகின்றனர். தினமும் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு திரு முறை நூல்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.  இதையடுத்து மார்கழி மாத துவங்கியவுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொல்லங்கரை கிராமத்தில் மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, தெற்கு தெரு வழியாக திருமுறை நூல்களை பாடி வரு கின்றனர். பின்னர் தை முதல்நாளான பொங்கல் தினத்தன்று அந்த கிராம மக்கள், திருமுறை களை பாடி வந்தவர்களையும், திருமுறை களையும் கவுரவிக்கும் விதமாக வீடுகள் தோறும் வரவழைத்து அவர்களுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு  வழங்கியும், திருமுறைகளுக்கு ஆரத்தி எடுத்தும் வருகின்றனர். இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த த.செந்தில்குமார் கூறுகையில், “எங்களது கிராமத்தில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தை முதல் நாளில் திருமுறைகளை பாடி  வருபவர்களையும், திருமுறை நூல்களை யும் கவுரவிக்கும் நிகழ்வு வீடுகள்தோறும் நடைபெறுகிறது. எங்களது கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 30-க்கும்  மேற்பட்ட திருமுறைகளை பாடும் ஓது வார்கள் இருந்தனர். நெல்லுப்பட்டு நமச்சிவாய சுவாமிகள் வழிகாட்டுதலில் எங்களது கிராமத்திலிருந்து திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவுக்கு சென்று திருமுறைகளை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது தமிழ் திருமுறைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், திருமுறை நூல்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. சிறுவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர்” என்றார்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இருவர் பலி

தூத்துக்குடி, ஜன.  16  தூத்துக்குடி அத்திமரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஜெயமுரு கன் என்பவரது மகன் அருண் வயது 20, வெல்டரான இவர், திங்கட் கிழமை முத்தையாபுரத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு அங்கி ருந்து அத்திமரப்பட்டி நோக்கி வந்து  கொண்டிருந்தார். அப் போது எதிரே  வந்த தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்  என்பவரது   இரு சக்கர வாகன மும் நேருக்கு நேர் மோதியது.  இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டு  தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த னர். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மது கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை

தூத்துக்குடி, ஜன.  16  தூத்துக்குடி சத்திரம் தெருவில் அரசு மதுபான க் கடை அமைந்துள்ளது . இந்த கடையில்  திங்கட்கிழமை விற்பனை அதிக அள வில் நடைபெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த கடையின்  டாஸ்மாக் சூப்பர்வைசராக இருக்கும் சோமசுந்தரம் செவ்வாய்க் கிழமை அதிகாலை கடை பகுதிக்கு சென்று பார்க்கும் போது கடை யின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி  அடைந்த அவர் இது குறித்து, வட பாகம் காவல் நிலைய போலீசா ருக்கு  அவர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமை யிலான போலீசார் சோதனை நடத்தினர். இதில், டாஸ்மாக் கடையில் இருந்த பணம் சுமார் ஒரு லட்சம் மற்றும்  மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது, இதை  தொடர்ந்து காவல்துறையினர் அரசு மதுபான கடையில் கொள்ளை யில் ஈடுபட்ட மர்ம நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி கள் மூலம் தேடி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள  டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளை போய் இருப்பது மக்கள் மத்தி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த முதப்பன் கோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(52). இவர் தனது வீட்டின் அரு காமையில் உள்ள எட்டு வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அப்போது அந்த சிறுமி  கதறி அழுது உள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் நீ சத்தம் போட்டு  தகவல் வெளியில் தெரிந்தால் உன்னையும் உனது தாயாரையும் வீட்டோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விடுவதாக மிரட்டி யுள்ளார். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் மறைந்து இருந்த ரவீந்திரனை கைது செய்து உள்ளனர். இவர்மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு  பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை நண்பர்கள் இருவர் கைது

 தென்காசி ,ஜன. 16  தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே கம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் .இவருக்கு .திருமணமாகி இரண்டு  குழந்தைகள் உள்ளனர். இவர் தன்னுடைய நண்பர்கள் பன்னீர் செல்வம் ,சுரேஷுடன் மகாலிங்கம் மலைக்குச் சென்று  மது அருந்தி  உள்ளனர் .இந்நிலையில் மூன்று பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பித்து அது முற்றிய நிலையில் சுரேஷும் பன்னீர்செல்வமும் சேர்ந்து நண்பர் ராஜ்குமாரைஅரிவாளால் வெட்டி படுகொலை செய்து  விட்டு தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல்  அறிந்து ஆய்க்குடி காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி ,சார்பாய்வாளர் முருகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவ மனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பன்னீர் செல்வம் சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

குமரியில் ஊராட்சிகளில் மாற்றம் இல்லை
அமைச்சர் த.மனோ தங்கராஜ் உறுதி

நாகர்கோவில்,ஜன.16- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் தற்போதைய நிலையில் தொட ரும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ் உறுதிபட தெரிவித்துள் ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 10  ஊராட்சி களை  பேரூராட்சி களாக தரம் உயர்த்தவும்,  25 ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூ ராட்சிகளுடன் இணைக்கவும் திட்டமிடப் பட்டிருந்தது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முலாக அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில ஊராட்சிகளில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. நூறுநாள் வேலை செய்யும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் மனோ தங்க ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் நலனுக்கு எதிரான எந்த திட்டத்தை யும் அரசு செயல்படுத்தாது. தமிழகத்தில் மொத்தம் 12,525 ஊராட்சிகள் உள்ளன. சென்னையை தவிர்த்து, நீலகிரிக்கு அடுத்த படியாக குறைந்த ஊராட்சிகள் உள்ளது  கன்னியாகுமரி மாவட்டத்தில். திருவண்ணா மலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள் உள்ளன. ஆனால், குமரி மாவட்டத்தில் 95  ஊராட்சிகள் மட்டுமே உள்ளன. மேலும் கன்னியாகுமரி சூழியல் உணர்வு  மிகுந்த மாவட்டம் என்பதால் கனரக தொழிற் சாலைகளோ பெரும் வருவாய் ஈட்டும் வணிக வாய்ப்புகளோ இல்லை. எனவே, உள்ளாட்சி  அமைப்புகள் அரசின் திட்டங்களை சார்ந்தே இயங்குகின்றன. குமரியின் இயற்கை  சூழலுக்கு நகர்மயமாக்கல் உகந்ததல்ல. இவை குறித்து தமிழக ஊரக உள்ளாட்சி  துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் குமரி மாவட்ட மக்களின் விருப்பத் திற்கு எதிராக அரசு முடிவெடுக்காது என்று  உறுதி அளித்தார். எனவே, ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்றார்.

இரு சக்கர வாகனம் மாயம்

அருப்புக்கோட்டை, ஜன.16- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணிநகரைச் சேர்ந்தவர்  முருகன் (51). இவர் தனியார் கல்லூரி எதிரே கடை கட்டி வருகிறார்.  தனது இரு சக்கர வாகனத்தை வேலையாட்களிடம் கொடுத்துள்ளார்.  அவர்கள் கடை முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு உறங்கி யுள்ளனர். மறுநாள் காலையில் பார்த்த போது இரு சக்கர வாகனம்  மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, முருகன் அளித்த புகாரின்  பேரில், பந்தல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி  வருகின்றனர்.