மயிலாடுதுறை, டிச.10 - மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜகவின் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை) என்ற பெயரில் பிரதமரின் காணொலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ்த்துறை அமைச்சர் சர்பா னந்த சோனோவால் பங்கேற்று, பொய்யை மட்டுமே பேசினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி காணொலியில் பேச ஏற்பாடு செய்திருந்தனர். பிரதமர் பேசத் துவங்கியவுடன், நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக வாகனங்களில் அழைத்து வரப் பட்டவர்கள், பிரதமரின் உரையை கேட்காமல் அரங்கை விட்டு வெளியே றினர். இதனால் ஒன்றிய அமைச்சர் மற்றும் அலுவலர்கள் தவிர்த்து, அரங்கம் காலி நாற்காலிகளுடன் வெறிச் சோடிக் காணப்பட்டது. இதனிடையே நிகழ்ச்சியின் போது கல்லூரி வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த பாஜக எல்இடி பிரச்சார வாக னத்தின் ஜெனரேட்டரில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பற்ற தொ டங்கியது. அருகில் இருந்த தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர், ஜென ரேட்டரிலிருந்து மேலும் தீ பரவாமல் இருக்க நுரை தீயணைப்பான் மூலம் தீயை அணைத்தனர். பின்னர், வாக னத்தில் இருந்து ஜெனரேட்டர் அப்புறப் படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.