districts

img

வாலிபர் சங்கத்திற்கு நிதி வழங்கிய தம்பதி

புதுக்கோட்டை, பிப்.14 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததானக் கழக மாநில மாநாட்டிற்கு வளைகாப்பு தம்பதியர் புதன்கிழமை நிதி வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததானக் கழக மாநில மாநாடு பிப்.17, 18 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு உறுப்பினராக எஸ்.பாண்டியன் உள்ளார். இவரது மனைவி மீனாட்சிக்கு புதன்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  வளைகாப்பு நிகழ்ச்சியையொட்டி வந்த தோழர்களிடம், ரத்ததானக் கழக மாநில மாநாட்டு நிதியாக ரூ.5,000-ஐ பாண்டியன்-மீனாட்சி தம்பதி வழங்கினர். இவ்விழாவில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், நகரக்குழு உறுப்பினர் எம்.ஏ.ரகுமான், பழ.குமரேசன் பங்கேற்றனர்.