அறந்தாங்கி, ஆக.31 - புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினம் மீன வர் வலையில் 24 கிலோ எடை கொண்ட கூரல் மீன் சிக்கியது. இதன் நெற்றிப் பகுதி மருத்துவத்திற்கு பயன் படுவதால், இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என கூறப் படுகிறது. இந்த மீனை மீன் வியாபாரி நவாஸ்கான் என்பவர் ஏலம் எடுத்தார். இந்த மீனின் நெற்றிப் பகுதி மருந்து தயாரிக்க பயன்படுகிறது. மீனின் நெற்றி யின் எடையை பொறுத்து ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை விலை போகும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக இந்த மீனின் உடல் பாகங்கள் ஒரு கிலோ ரூ.1000 முதல் 1500 வரை விற்பனையாகும். இந்த மீன் கிடைப்பது மிக அபூர்வம். அய்யம்பட்டி னம் கடற்பகுதியில் மட்டும் இந்த மீன் சில சமயங்கள் சிக்குவதுண்டு. விலை உயர்ந்த இந்த மீனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.