districts

சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் ரூ.50 கோடி மோசடி செய்த நிறுவனம்

மதுரை, மார்ச் 12- மதுரையில் சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் பொதுமக்க ளிடம் ரூ.50 கோடி வசூலித்து மோசடி செய்த நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி  பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளித்தனர். மதுரையில் கடந்த 2013-ஆம் ஆண்டு சினேகா மல்டி ஸ்டேட் கோ  ஆப்ரேடிவ் ஹவுஸ் பில்டிங் சொசைட்டி (எஸ்எம்சி) என்ற நிதி  நிறுவனம், ஒன்றிய அரசின் அனு மதி பெற்ற நிறுவனம் என்று கூறி தொடங்கப்பட்டுள்ளது.  மதுரையைத் தொடர்ந்து தேனி,  திண்டுக்கல், விருதுநகர், கன்னியா குமரி, தூத்துக்குடி, திருச்சி, கேர ளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்க ளிலும் எஸ்எம்சி என்ற பெயரில்  பிரம்மாண்டமான அலுவலகங் களை திறந்து வங்கி வேலைக்கு  ஆட்கள் தேவை என விளம்பரம்  செய்து அதன் மூலமாக வேலைக்கு  ஆட்கள் எடுத்துள்ளனர்.  அப்போது காப்புத்தொகை என்ற பெயரில் பணியில் சேரும்  மேலாளர் தொடங்கி அனைத்து  ஊழியர்களிடமும் ரூ.2 லட்சம்  முதல் ரூ.5 லட்சம் வரை பெற் றுள்ளனர். இதைத்தொடர்ந்து ஒவ் வொரு கிளைக்கும் 15 பேர் வரை வேலைக்கு சேர்த்து ஊழியர்கள் மூலமாக வாடிக்கையாளர்களை அணுகி சிறுசேமிப்புத் திட்டம்  என்ற பெயரில் பல ஆயிரம் பொது மக்களையும் வாடிக்கையாளர் களை இணைத்துள்ளனர்.  இந்த எஸ்எஸ்சி கூட்டுறவு நிறு வனத்துக்கு விஜய் என்பவர் தலை வராகவும், சாந்தினி என்பவர் துணைத் தலைவராகவும் இருந்து  பணியில் சேர்ந்த அனைத்து ஊழி யர்களுக்கும் பயிற்சி வகுப்புகள், புத்தாக்கப் பயிற்சிகளையும் அளித்துள்ளனர். இதை நம்பிய  ஊழியர்களும், தங்களது உற வினர்கள், தெரிந்தவர்கள் என பல ரையும் வாடிக்கையாளர்களாக சேர்த்துள்ளனர்.  இந்த நிறுவனத்தில் தினசரி சேமிப்புத் திட்டத்தில் ரூ.50 முதல் ரூ.1,000 வரை சேமிக்கலாம்  என்றும் குறைந்தபட்சம் 100 நாள் கள் முதல் அதிகபட்சம் 156 வாரங் கள் வரை முதிர்வு காலமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது.  அதற்கு தகுந்தார்போல குறைந்தபட்சம் 3 சதவீதம் வட்டி முதல் அதிகபட்சமாக 12 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளனர். மேலும் மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்ற  பெயரிலும் பலரிடம் பணம் வசூ லித்துள்ளனர். இதன்படி இந்நிறு வனம் ஆயிரக்கணக்கானோரிடம் ரூ.50 கோடி வரை வசூலித்துள் ளது.  இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்காத நிலையில், நிறு வனத்தின் ஊழியர்களுக்கும் ஊதி யம் வரவில்லை. இதுகுறித்து ஊழி யர்கள் நிறுவனத் தலைவரிடம் கேட்டபோது, தொழில்நுட்ப  கோளாறால் வங்கியில் வரவு வைக்க முடியவில்லை. விரைவில்  ஊதியமும், வாடிக்கையாளர் களுக்கு முதலீட்டுத் தொகையும் தரப்படும் என்று கூறி அலைக் கழித்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து நிறுவ னத்தின் மீது கன்னியாகுமரி, திண்  டுக்கல் மாவட்டங்களில் பொதுமக்  கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து,  

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம்  தேதிக்குள் அனைவருக்கும் பணம்  வழங்கப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.  இதையடுத்து பிப்ரவரி 15-ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களுக்கு வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் சென்றபோது, அலுவலகங்கள் பூட்டப்பட்டது தெரியவந்தது.  இந்நிலையில் மதுரையில் இயங்கி வந்த 3 அலுவலகங்களும் மூடப்பட்ட நிலையில், இதில் பணி புரிந்த ஊழியர்கள், பணம் செலுத்  திய வாடிக்கையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மதுரை மாநக ரக் காவல் ஆணையர் அலுவல கத்தில் நிறுவனத்தின் மீது திங்க ளன்று புகார் அளித்தனர்.  புகாரில், ஒன்றிய அரசின் அங்கீ காரம் பெற்ற நிறுவனம் என்று கூறி  ஊழியர்கள் அனைவரிடமும் ரூ.2  லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை  காப்புத் தொகையாக பெற்றுக் கொண்டனர். மேலும் ஊழி யர்கள் மூலம் ஏராளமான பொது மக்களும் நிறுவனத்தில் ரூ.50 கோடி  வரை முதலீடு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக ஏற்கெனவே  புகார் அளித்தபோது நிறுவனத் துக்கு சிலுக்குவார்பட்டியில் நிலம் சொந்தமாக இருப்பதாகவும் அதை விற்று பணத்தை செலுத்தி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நிறுவனத்தின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் என யாரையும் தொடர்பு கொள்ள  முடியாமல் தலைமறைவாகியுள்ள னர். எனவே காவல்துறை தலை யிட்டு பணத்தை மீட்டுத்தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  குறிப்பிட்டிருந்தனர்.