districts

img

மோடி அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து கரூரில் விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம்

கரூர், செப்.4- ஒன்றிய அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகளைக் கண்டித்து  கரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்தப்  பிரச்சாரத்தில் செப்.7-ஆம் தேதி  நடைபெறும் மறியலில் உழைப் பாளி மக்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு மாவட்டக் குழு  உறுப்பினர் ஏ.பெருமாள் தலைமை யில் பிரச்சாரம் நடைபெற்றது. கீழ  வெளியூரில் கிளைச் செயலா ளர் எம்.பாலு தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர்  மா.ஜோதிபாசு, மாவட்  டச் செயற்குழு உறுப்பினர்  கே. சக்திவேல், தோகைமலை ஒன்றி யச் செயலாளர் ஏ.சுப்பிரமணியன், ஏ.ரமேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வேலாயுதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர் அ.காதர்பாட்சா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டக்குழு உறுப்பி னர் கே.சண்முகம், ஒன்றியச் செய லாளர்  எம்.ராஜேந்திரன் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர். கரூர் உப்பிடமங்கலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கிளைச் செயலாளர் ராஜீவ்காந்தி, மாவட்  டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ஜீவானந்தம்,  மாநகர்  செயலாளர் எம்.தண்டபாணி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.  திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதி பாசு, ஒன்றியச் செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.