திருச்சிராப்பள்ளி, ஜன.8- கரூர் மாவட்டம் கூடலூ ரில் உள்ள 9.1 ஹெக்டேர் பரப்பு பாதுகாக்கப்பட்ட பகு தியாக விரைவில் அறிவிக்கப் பட உள்ளது. கரூர் மாவட்டம் குளித் தலை தாலுகா கூடலூரில் உள்ள 9.1 ஹெக்டேர் பரப் பளவில் உள்ள பழங்கால புராத மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் உள்ள பாது காக்கப்பட்ட இடமாக அறி விக்க மாநில தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1966-இன் துணைப்பிரிவு 3-ன் கீழ் அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளி யாக உள்ளது. கரூர் அருகே கூடலூரில் உள்ள பெருங்கற்காலப் பகுதியை தொல்லியல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர சம்மந்தப்பட்ட 9.1 ஹெக் டேர் இடத்தின் தொல் பொருள் முக்கியத்துவம் தெரியாமல், கற்களை அகற் றியதாகக் கூறப்படுகிறது. எனவே, மாநில தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பணியை தொடங்கியது. நிதித்துறை முதன்மைச் செயலரும், தொல்லியல் துறை ஆணையருமான டி.உதயச்சந்திரன் உத்தரவின் பேரில், தொல்லியல் துறை இணை இயக்குநர் ஆர்.சிவானந்தம் மேற்பார்வையில், தொல்லி யல் துறை மற்றும் வரு வாய்த் துறை அதிகாரிகள் குழுவினர் கூடலூருக்கு வந்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறி விக்கப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டனர். தொல்லியல் துறையின் உதவிப் பொறியாளர் என். ராஜேஷ், கூறுகையில், 9.1 ஹெக்டேர் பரப்பளவில் இந்த கற்காலத் பாது காக்கப்பட்ட நினைவுச் சின்ன மாக அறிவிக்கப்படும். ஆணையான வெளியான பின் பாதுகாக்கப்பட்ட பகுதி யிலிருந்து இருந்து மக்கள் எடுத்துச் செல்ல முடியாது. சுரங்க நடவடிக்கை மற்றும் கட்டுமானம் ஆகிய நோக்கங்களுக்காக, பாது காக்கப்பட்ட பகுதியிலி ருந்து சுமார் 200 மீட்டர் அல்லது அதற்கு மேலும் அடையாளம் காணப்படும் பகுதி வரை கற்கள், கனிமம் உள்ளிட்ட எந்தப் பொருளும் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என்றார்.