தென்காசி, செப்.19. தென்காசி மாவட்டம், குற்றாலம் திருக்குற்றால நாத சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அருகில் 15 அடி நீள ராஜ நாகம் நடமாடியது.இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து உதவி ஆணையர் அலுவலக தலைமை கணக்கர் அழகு ராஜேஸ்வரி, தென்காசி தீய ணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தார் தென்காசி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்புப் படைவீரர்கள் வந்து பார்த்த போது ராஜநாகம் என அறி யப்பட்டது. பின்னர் 15 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். அதனை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.